umn ministry

Jeremiah Full Movie in Tamil | எரேமியா | Tamil Christian Movie |Jeremiah Tamil Bible Movie

0


Jeremiah Full Movie in Tamil | எரேமியா | Tamil Christian Movie |Jeremiah Tamil Bible Movie



Free download 👇👇👇


எரேமியா புத்தகம் ஒரு கண்ணோட்டம்



முன்னுரை

எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய இளம் பிராயத்திலேயே கர்த்தருடைய ஊழியத்தை செய்ய ஆரம்பிக்கிறார். எரேமியாவுக்கு ஊழியத்தினிமித்தமாய் ஏராளமான பாரங்களும், வேதனைகளும் உண்டாயிற்று. ""தன் இளம் பிராயத்தில் நுகத்தை சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது'' (புல 3:27) என்று எரேமியா தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக சொல்லுகிறார்.  

ஏசாயா தீர்க்கதரிசி எரேமியாவைப்போல இளம் வயதில் தன்னுடைய ஊழியத்தை ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய வாலிப நாட்களிலோ அல்லது அதற்கு பின்போ ஏசாயா தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். ஏசாயா அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவே வாசமாயிருந்தார். அவரும் அசுத்த உதடுகளுள்ள மனுஷனாயிருந்தார். இதனால் ஏசாயாவின் உதடுகள் நெருப்பு தழலால் சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிற்று (ஏசா 6:5-7).

கர்த்தர் தமது கரத்தை நீட்டி எரேமியாவின் வாயைத் தொட்டார் (எரே 1:9). கர்த்தர் ஏசாயாவின் உதடுகளை நெருப்புத்தழலால் தொட்டதுபோல, எரேமியாவின் வாயை நெருப்புத்தழலால் தொடவில்லை. எரேமியா தன்னுடைய இளம்பிராயத்தில் இருந்தபடியினால், அவரிடத்தில் அதிகமான பாவங்கள் காணப்படவில்லை. அவர்களுடைய உதடுகளும் அசுத்தமாயில்லை. 

எரேமியா தீர்க்கதரிசி அநேக வருஷங்களுக்கு கர்த்தருடைய ஊழியத்தை செய்தார். சுமார் ஐம்பது வருஷகாலங்களாக எரேமியா கர்த்தருடைய ஊழியத்தை செய்திருக்கவேண்டுமென்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். வேறு சிலரோ அவர் நாற்பது வருஷங்களாக ஊழியம் செய்திருக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.  


யூதாவின் ராஜாவாகிய யோசியா அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. யோசியா கர்த்தருக்குப் பயந்து நல்லாட்சி செய்தவன். யோசியாவுக்கு பின்பு யூதா தேசத்தை துன்மார்க்கமான ராஜாக்கள் ஆட்சி புரிந்தார்கள். எரேமியா தீர்க்கதரிசி அவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் கர்த்தருடைய ஊழியத்தை தொடர்ந்து செய்தார். 

எரேமியா பாவங்களை கண்டித்து உணர்த்தும் தீர்க்கதரிசியாக ஊழியம் செய்தார். யாக்கோபின் பாவங்களை எடுத்துச் சொல்லுவதற்கு எரேமியா கர்த்தருடைய நாமத்தினால் அனுப்பப்பட்டவர். எரேமியா அவர்களுடைய பாவங்களை எடுத்துச் சொல்லி, அவர்கள்மீது தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் வரும் என்று எச்சரித்தார். 

எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் தெளிவாகவும் கண்டிப்பானதாகவும் உள்ளது. அவர் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்தும்போது மென்மையான வார்த்தைகளை பயன்படுத்தாமல், கடினமான, கண்டிப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளைவிடவும், மற்ற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைவிடவும், எரேமியாவின் தீர்க்கதரிசன வார்த்தைகள் கடினமாயும், கண்டிப்பாயும் இருந்தது.  

நாம் பாவிகளோடு பேசும்போது மென்மையான வார்த்தைகளைப் பேசுவதற்குப் பதிலாக, கடினமான வார்த்தைகளை கண்டிப்புடன் பேசவேண்டும். அவர்களுடைய பாவங்களை, சுற்றி வளைத்து ஏனோதானோவென்று சொல்லுவதற்கு பதிலாக, தெளிவாகச் சொல்லவேண்டும். பாவிகள் மனந்திரும்பவேண்டுமென்று அவர்களுக்கு கண்டிப்போடு சொல்லவேண்டும்.  

எரேமியா அழுகையின் தீர்க்கதரிசியாகவும் இருந்தார். அவருடைய காலத்தில் ஜனங்கள் பாவத்திலே ஜீவித்தார்கள். அவர்களுடைய பாவங்களையெல்லாம் எரேமியா கண்ணீரோடு கவனித்து வந்தார். புலம்பலின் புஸ்தகத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் இருதய வேதனைகளெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. 

எரேமியா பாடுகளை அனுபவிக்கிற தீர்க்கதரிசியாகவும் ஊழியம் செய்தார். அவருடைய சொந்த ஜனங்களே அவருக்கு நெருக்கத்தையும், உபத்திரவத்தையும் கொடுத்தார்கள். கல்தேயர்கள் யூதர்களை அழிப்பதற்கு முன்பாக, எரேமியா இஸ்ரவேல் ஜனத்தார் மத்தியில் கர்த்தருடைய செய்தியை தீர்க்கதரிசனமாகச் சொன்னார். 

ரோமப்பேரரசார் எருசலேமையும், யூதர்களையும் அழிப்பதற்கு முன்பு, யூதர்களுடைய குணாதிசயங்கள் எப்படி மோசமாயிருந்ததோ, அப்படியே எரேமியாவின் காலத்திலும் அவர்களுடைய குணாதிசயங்கள் மிகவும் மோசமாயிருந்தது. 


இயேசுகிறிஸ்துவின் காலத்திலே, யூதர்கள் இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினார்கள். அவருக்கு உபத்திரவங்களைக் கொடுத்தார்கள். கிறிஸ்துவை சிலுவையில் அறைந்தார்கள். இயேசுகிறிஸ்துவின் சீஷர்களையும் துன்பப்படுத்தினார்கள். யூதர்கள்மீது தேவனுக்கு பிரியமில்லாமல் போயிற்று. தேவனுடைய கோபம் அவர்கள்மேல் வந்தது.  


அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் காலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து, புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள் மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது'' (1தெச 2:15,16).

எரேமியாவின் மரணம் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. எருசலேமிலுள்ள யூதர்கள் எகிப்து தேசத்திற்கு புறப்பட்டுப் போனபோது, அவர்கள் எரேமியாவையும் கட்டாயப்படுத்தி தங்களோடு எகிப்திற்கு அழைத்துக்கொண்டு போனார்கள். எரேமியா இரத்த சாட்சியாக மரித்திருக்கவேண்டும் என்று வேதபண்டிதர்கள் சொல்லுகிறார்கள். 

எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் கி.மு. 685 # 606 ஆம் வருஷத்தில் பாலஸ்தீன தேசத்தில் எழுதப்பட்டது. எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் முழுவதிலும் எரேமியாவே இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் என்பதற்கு அநேக ஆதாரங்கள் உள்ளன. வேதபண்டிதர்கள் அனைவரும் இந்தப் புஸ்தகத்தின் ஆசிரியர் எரேமியாவே என்பதில் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறார்கள்.


மையக்கருத்து


கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போவது, தேவதூஷணம் கூறுவது, ஆகியவற்றினால் ஏற்படும் விளைவுகளை எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் விவரித்துக் கூறுகிறது. வேதாகமத்தில் எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், ஓசியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும் (ஓசி 4:16; ஓசி 11:7; ஓசி 14:4) மாத்திரமே பின்மாறிப் போதல் என்னும் வார்த்தை காணப்படுகிறது. எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் மாத்திரம் இந்த வார்த்தை 13 தடவைகள் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. (எரே 2:19; எரே 3:6-22; எரே 5:6; எரே 8:5; எரே 14:7; எரே 31:22; எரே 49:4)


எரேமியா தீர்க்கதரிசி தன்னுடைய ஜனங்களோடு தொடர்ந்து வெளிப்படையான யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார். கர்த்தரை மறுதலிக்கிறவர்களுக்கும், கர்த்தரை விட்டுப் பின்வாங்கிப்போனவர்களுக்கும் தேவனுடைய நியாயத்தீர்ப்பு இரக்கமில்லாமல் வரும் என்பது எரேமியாவின் மையச்செய்தியாகும்.


எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகத்தில் கூறப்பட்டிருக்கும் மற்ற கருத்துக்கள்:

 1. யூதா தேசத்தார் பாபிலோனுக்கு உடனடியாக சிறைப்பிடித்துச் செல்லப் படுவார்கள்.

 2. எழுபது வருஷ சிறையிருப்பிற்குப் பின்பு, இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுடைய தேசத்திற்குத் திரும்பி வருவார்கள்.


3. இஸ்ரவேல் ஜனங்கள் மறுபடியும் உலகம் முழுவதும் சிதறிப்போவார்கள்.

 4. இந்தக் காலத்தின் முடிவில் இஸ்ரவேல் புத்திரர் இறுதியாகக் கூட்டிச் சேர்க்கப் படுவார்கள். 

 5. மேசியா எருசலேமின்மீது நித்திய காலமாக ஆட்சி புரிவார்.

எரேமியா தீர்க்கதரிசியின் புஸ்தகம் எழுதப்பட்டதற்கான நோக்கத்தின் விவரம் வருமாறு:

 1. பாவத்தின் விளைவுகளையும், தேவனை விட்டுப் பின்வாங்கிப்போவதினால் ஏற்படும் விளைவுகளையும் இஸ்ரவேல் புத்திரருக்குத் தெளிவுபடுத்துவது.

 2. மனுஷனைக் குறித்த தேவனுடைய திட்டத்தில் இஸ்ரவேல் புத்திரரின் வருங்காலத்துப் பங்கை அவர்களுக்கு வெளிப்படுத்துவது.

 3. ஒவ்வொரு மனுஷனும் தேவனோடும், அவருடைய திட்டத்தோடும் இசைந்து போக வேண்டும். இதன் அடிப்படையிலேயே ஒவ்வொரு மனுஷனுடைய முடிவும் அமையும் என்பதை வலியுறுத்துவது.


பொருடளக்கம்


  ஒ. எரேமியாவின் ஊழியம்
1. தலைப்பு, ஆசிரியர், வரலாற்று பின்னணி (1:1-3)
2. எரேமியாவின் முதலாவது ஊழியம் (1:4-10)
3. வாதுமை மரக்கிளையின் அடையாளம் - முக்கியத்துவம் - நிறைவேற்றம் (1:11-12)
4. பொங்குகிற பானையின் அடையாளம் - முக்கியத்துவம் - பாபிலோனிய படையெடுப்பு (1:13-16)
5. எரேமியாவின் இரண்டாவது ஊழியம் (1:17-19)


ஒஒ. யூதாவுக்கு எதிராக தேவனுடைய வழக்கு

1. யூதாவுக்கு முதலாவது செய்தி
(1) கன்னித்தன்மையின் ஏழு அம்சங்கள் (2:1-3)
(2) யூதாவின் பத்து பாவங்கள் (2:4-8)
(3) தேவனுடைய வழக்கு
  (அ) தேவர்களை மாற்றினார்கள் (2:9-11)
  (ஆ) இரண்டு தீமைகளைச் செய்தார்கள் (2:12-13)
  (இ) வரப்போகிற சிறையிருப்பு (2:14-18)
  (ஈ) பொதுவான பாவங்கள் (2:19)
  (உ) தேவனுடைய கடந்த கால கிரியைகள் (2:20-21)
  (ஊ) நம்பிக்கையின்மை (2:22-25)
  (எ) விக்கிரகாராதனை (2:26-28)
(4) இஸ்ரவேலின் கேள்வி - பதில்

யூதாவின் பதினாறு பாவங்கள் (2:29-3:5)
2. யூதாவுக்கு இரண்டாவது செய்தி
(1) தோல்வியின் மூன்று அம்சங்கள் (3:6-11)
(2) அழைப்பு - காரணம் - தேவனுடைய இரக்கம் - நிபந்தனை - மனந் திரும்ப வேண்டும் (3:12-13)
(3) அழைப்பு - காரணம் - திருமணம் - பதினான்கு ஆசீர்வாதங்கள் (3:14-21)
(4) அழைப்பு - வரப்போகிற பாவஅறிக்கை (3:22-25)
(5) திரும்பி வருவதற்கு ஏழு நிபந்தனைகள் (4:1-4)
(6) எச்சரிப்பு - பதினான்கு காரணங்கள் (4:5-7)

(7) அழைப்பு - காரணம் - ஒன்பது நியாயத்தீர்ப்புகள் (4:8-13)
(8) அழைப்பு - பத்து காரணங்கள் (4:14-18)
(9) எச்சரிப்பு - பதினான்கு அம்ச காரணம் (4:19-22)
(10) ஆதி பூமியின் ஒழுங்கின்மையின் எட்டு அம்சங்கள் (4:23-26)
(11) பூமியின் ஒழுங்கின்மையும் யூதாவின்மீது பாபிலோனின் நியாயத்தீர்ப்பும் (4:27-31)
(12) யூதாவின் பத்து பாவங்கள் (5:1-5)
(13) நியாயத்தீர்ப்பின் மூன்று அம்ச வருணனை (5:6)
(14) யூதாவின் ஐந்து பாவங்கள் (5:7-8)
(15) பகுதி நியாயத்தீர்ப்பு (5:9-10)
(16) யூதாவின் ஐந்து பாவங்கள் (5:11-12)
(17) பகுதி நியாயத்தீர்ப்பின் ஒன்பது அம்சங்கள் (5:13-19)

18) யூதாவின் இருபது பாவங்கள் (5:20-28)
(19) நிச்சயமான நியாயத்தீர்ப்பு (5:29-31)
(20) எச்சரிப்பு - எட்டு அம்ச காரணம் (6:1-9)
(21) யூதாவின் எட்டு பாவங்கள் (6:10-17)
(22) நியாயத்தீர்ப்பின் பன்னிரெண்டு அம்சங்கள் (6:18-26)
(23) எரேமியாவின் மூன்றாவது ஊழியம் (6:27-30)
3. யூதாவுக்கு மூன்றாவது செய்தி
(1) ஆசீர்வாதத்திற்கு ஏழு நிபந்தனைகள் (7:1-7)

(2) யூதாவின் எட்டு பாவங்கள் (7:8-12)
(3) இரண்டு அம்ச நியாயத்தீர்ப்பு (7:13-15)
(4) யூதாவின் விக்கிரகாராதனை (7:16-19)
(5) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (7:20)
(6) பத்து அம்ச புத்திமதி (7:21-28)
(7) புலம்பல் - காரணம் (7:29-31)
(8) பதினெட்டு அம்ச நியாயத்தீர்ப்பு (7:32-8:3)
(9) யூதாவின் பன்னிரெண்டு பாவங்கள் (8:4-9)
(10) ஒன்பது அம்ச நியாயத்தீர்ப்பு (8:10-13)
(11) யூதாவின்மீது பாபிலோனிய

படையெடுப்பு முற்குறித்து கூறப்படுகிறது (8:14-17)
(12) எரேமியாவின் வருத்தம் (8:18-9:1)
(13) வருத்தத்திற்கு காரணங்கள் - யூதாவின் பதினைந்து பாவங்கள் (9:2-8)
(14) ஏழு அம்ச நியாயத்தீர்ப்பு (9:9-12)
(15) யூதாவின் ஐந்து பாவங்கள் (9:13-14)
(16) ஐந்து அம்ச நியாயத்தீர்ப்பு (9:15-16)
(17) புலம்பலுக்கு அழைப்பு - ஏழு அம்ச காரணம் (9:17-22)
(18) தேவன் பிரியமாயிருக்கிறார் (9:23-24)
(19) இஸ்ரவேலும் புறஜாதியாரும் ஒன்று போல தண்டிக்கப்படுவார்கள் (9:25-26)
(20) விக்கிரகங்களின் எட்டு அம்ச மாயை (10:1-5)
(21) தேவன் இருக்கிறார் என்பதற்கு பதினெட்டு ஆதாரங்கள் (10:6-13)
(22) விக்கிரகாராதனைக்காரரின்
புத்தியீனம் (10:14-16)
(23) பன்னிரெண்டு நியாயத்தீர்ப்புகள் - காரணங்கள் (10:17-25)
 ஒஒஒ. அடையாளங்கள் - தீர்க்கதரிசனங்கள்
1. எரேமியாவின் நான்காவது ஊழியம் (11:1-7)
2. யூதாவின் எட்டு பாவங்கள் (11:8-10)
3. யூதாவின்மீது பத்து அம்ச நியாயத்தீர்ப்பு (11:11-17)
4. எரேமியாவிற்கு எதிராக முதலாவது சதி - அவனுடைய சகோதரர்கள் மூலமாக (11:18-20)
5. சதிகாரர்கள்மீது நியாயத்தீர்ப்பு (11:21-23)
6. எரேமியாவின் ஜெபம் (12:1-4)
7. தேவனுடைய பதிலுரை - எரேமியாவிற்கு எச்சரிப்பு -
நியாயத்தீர்ப்பின் ஏழு அம்சங்கள் (12:5-13)
8. யூதாவின் விரோதிகள்மீது நியாயத்தீர்ப்பு (12:14-17)
9. சணல் கச்சையின் அடையாளம்
(1) சணல் கச்சை வாங்கப்படுகிறது (13:1-2)
(2) சணல் கச்சை ஒளித்து வைக்கப் படுகிறது (13:3-5)
(3) ஒன்றுக்கும் உதவாத கச்சை (13:6-7)
10. இஸ்ரவேலுக்கு இது பொருந்தும் (13:8-11)
11. ஜாடிகளின் அடையாளம் (13:12)
12. யூதாவுக்கு இது பொருந்தும் (13:13-14)
13. பெருமையுடையவர்களுக்கு எச்சரிப்பு (13:15-17)
14. ஆட்சியாளர்களுக்கு எச்சரிப்பு (13:18-27)

Umn ministry Chennai 




You have to wait 60 seconds.

please wait Download Link...

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*