ஞானஸ்நானம் ஏன்?

0

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 7

IV. இதன் இலாபம் என்ன?

ஏ.நேச, பிரிய குமாரன் என்று அழைக்கிறோம்.
மத்-3:17

B. பரிசுத்த ஆவியை பெறுகிறோம்.
மத்-3:16, அப்-2:38

C. புதிய ஜீவியம் அடைகிறோம் – ரோமர் -6:4

D. கிறிஸ்துவை தரித்து கொள்கிறோம் கலா-3:27-28

இவ்வண்ணம் சத்திய வேதத்தில் தெளிவாக எந்த சந்தேகத்துக்கும் இடமில்லாமல்
எவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் விதத்தில் ஞானஸ்நானத்தை பற்றி
எழுதியிருந்தால் இது தேவ ஆலோசனை
என்றும், இதைத் தள்ளிப் போடக்கூடாதென்றும், அப்படி ஆலோசனைகளைத் தள்ளிப் போடுபவர்கள் தங்களுக்குத் தாங்களே
கேட்டு உண்டாக்கிக் கொள்கிறார்கள் என வேதம் எச்சரிக்கிறது
லுக்-7:30.

இப்படி கர்த்தருடைய வசனத்தின் படி ஞானஸ்நானம் எடுப்பதினால் உண்டாகும் நன்மை யாது?

ஏ.நேச, பிரிய குமாரன் என்று அழைக்கப்படுதல். மத்-3:17

இயேசு தேவனுடைய குமாரன் தான், ஆயினும் ஞானஸ்நானம் பெற்ற பின்னரே நேச
குமாரன் என்றும் பிரிய குமாரன் என்றும் பரலோகத்திலிருந்து பிதாவின்
சத்தம் அழைத்ததைக் கேட்க நேரிட்டது.

ஞானஸ்நானத்தில் தேவ ஆலோசனைக்குத் தன்னைக் கீழ்ப்படுத்தினபோது மட்டுமே
அல்லவா? தேவனுடைய பிள்ளைகளாக தேவனுடைய குடும்பத்தில்
மறபடியும்பிறந்தவர்கள் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து “எனது பிரிய
குமாரன், பிரிய குமாரத்தி” என பரம பிதாவினால்
அங்கீகரிக்கப்படுவது நமக்கு நல்லதல்லவா?

B. பரிசுத்த ஆவியை பெறுகிறோம். மத்-3:16, அப்-2:38

"நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு
கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றீர்கள், அப்பொழுது
பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்"

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோர்தானில் “ஞானஸ்நானம் பெற்று கரை ஏறின உடனேயே
, இதோ வானம் அவருக்கு திறக்கப்பட்டது. தேவ ஆவியானவர் புறாவைப் போல்
இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார்.

ஞானஸ்நானம் பெறுவதின் பாலபலனில் மற்றொன்று பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவது

“தேவன் தமக்கு கீழ்ப்படுகிறவர்களுக்கு தந்தருளின பரிசுத்த ஆவி”
(அப்-5:32)என நாம் வாசிக்கிறோம்.

ஞானஸ்நானத்தைக் குறித்து வேத வசனம் சொல்லும் ஆலோசனைக்குக்
கீழ்ப்படுகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் தந்தருளப்படுகிறது என
வாசிக்கிறோம். சிலர் நாங்கள் ஞானஸ்நானம் எடுக்காமலேயே பரிசுத்த ஆவியைப்
பெற்றிருக்கிறோம். எங்களுக்கு ஞானஸ்நானம் தேவையா? என வினவுகிறார்கள்.

அவர்களுக்கு வேதம் கட்டளையிடுவது யாதெனில் “பரிசுத்த ஆவியைப் பெற்ற
இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா? என்று
சொல்லி கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் படி
கட்டளையிட்டான்” (அப்-10:47-48)

சத்திய வசனம் எவர்களையும் சந்தேகத்துக்குள்ளாக்காமல் தெள்ளத்தெளிவாய்
இந்த ஆவிக்குரிய அனுபவத்தை நமக்கு போதிக்கிறது.

C. புதிய ஜீவியம் ரோமர்-6:4

“நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு அவருடைய
மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம்”

இந்த புதிய ஜீவியம் ஒரு சாட்சியின் ஜீவியம்!

பழையவைகள் எல்லாம் ஒழிந்து போயின, இதோ பார், எல்லாம் புதிதாயின – 2கொரி-5:17.

அப்புது ஜீவியம் ஜீவிப்பதற்கு ஒரு புது குடும்பம், அதாவது சபையில்
சேர்க்கப்பட்டு, ஜக்கியப்பட்டு ஜீவிக்கிறதாகிய
ஒன்று.
“ஞானஸ்நானம் பெற்றவர்கள் சபையில் சேர்க்கப்பட்டார்கள்”(அப்-2:40) சபையில்
ஒரு சரீரமாக ஜீவித்து, அதில் ஒரு அவயவம் பாடுபட்டால் மற்ற அவயவங்கள்
அதனோடு கூட பாடுபடும் என்ற புதிதான குடும்ப கட்டு ஒன்று
உருவாக்கப்படுகிறது.

இது ஒரு பாக்கியமே! இப்படி ஞானஸ்நானம் பெற்றவர் கர்த்தருக்கு சாட்சியாக
ஜீவிக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

D. கிறிஸ்துவை தரித்துக் கொள்ளுதல் – கலா-3:27-28

“உங்களில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர் எத்தனை பேரோ
அத்தனை பேரும் கிறிஸ்துவை தரித்துக் கொண்டிருக்கிறீர்களே.

யூதனென்றும்,
கிரேக்கனென்றும் இல்லை(ஜாதி வித்தியாசம் இல்லை) அடிமையென்றும்,
சுயாதீனனென்றும் இல்லை (அந்தஸ்தில் வித்தியாசம் இல்லை) ஆணென்றும்,
பெண்ணென்றும் இல்லை (பால் வித்தியாசம் இல்லை) நீங்கள் எல்லாரும் கிறிஸ்து
இயேசுவுக்கள்
ஒன்றாயிருக்கிரீர்கள்”

ஞானஸ்நானம்பெற்றதின் மூலம் அவரைத் தரித்துக் கொண்டவர்களாயும் ஒரே
குடும்பத்தினராயும் மாறிவிடுகிறோம். இதுவே வேதத்தின் படி ஒரு விசுவாசி
எடுக்கம் ஞானஸ்நானம்.

கடைசியாக :

வேதத்தை வாசிக்கிற
அதன் சத்தியத்தை விசுவாசிக்கிற
அதன் அருமைகளை நேசிக்கிற
அதன் கருத்தை யோசிக்கிற
அதை மற்றவர்களுக்கு உபதேசிக்கிறவரே!

இதுவே சத்தியம் என்று
உம் மனச்சாட்சிக்கு
நன்றாய்த் தெரியும்
ஆனால் வீண்
வைராக்கியத்தை விட்டு
சத்தியத்தை வாங்குவீர்
எக்கிரயம் கொடுத்தாகிலும் வாங்குவீர்

சத்தியத்தை
விற்காதீர் (நீதி-23:23)

“புருஷனைப்போல் இடைக்கட்டிக் கொள்வீர்”

பருவமடைந்தவரைப் போல் –
பொறுப்பள்ளவரைப் போல் –
இடைக்கட்டிக் கொள்வீர் – யோபு-38:3

“தாமதிக்கிறதென்ன……………
நீ எழுந்துஇப்பொழுதே ஞானஸ்நானப்படு” அப்-22:16

——————————

சில சபைகளில், மரிக்கும் தறுவாயில் உள்ள சிலர் இரட்சகராகிய இயேசுவை
விசுவாசிப்பதுண்டு அவர் அவர்கள் சபையில் போதகரை அழைத்து ஞானஸ்நானம்
பெற்றுக்கொள்ள வாய்ப்பும் சமயமும் இல்லாமல் போகிறது.

இப்படி இருக்கையில் மருத்துவமனையில் பணி புரிகிறவர்கள் அவர்களுக்கு
ஞானஸ்நானம் கொடுக்க அதிகாரம் பெற்றிருந்தனர். மேலும் ஒரு பிரசவ சமயத்தில்
குழந்தை பிறந்ததும் மரித்து விடுமானால் அல்லது மரித்து பிறந்ததனால்
கல்லறையில் அடக்கம் செய்வதற்கு ஏதுவுடண்டாக
மருத்துவச்சிகள் (Nurse or Midwife) அக் குழந்தைக்கு பெயர் சூட்டி
கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஞானஸ்நானம் கொடுத்து வந்த பழக்கம் இருந்து
வந்தது, இதுவும் வேதத்தின் முறையல்ல.

6.”இயேசுவின் நாமத்தில்” எடுக்கும் ஞனஸ்நானம்

நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் ஊழியத்திற்கு
அப்போஸ்தலரை அனுப்பும்போது கொடுத்த கட்டளை யாதெனில்

“நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா, குமாரன்,
பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுங்கள்”என்பதே,

முதலில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூன்று தேவர்கள் அல்ல. ஒரே
தேவனாக 'திரியேகத்வம்' வாய்ந்தவராய் இருப்பதனால் “நாமத்தில்” என
வாசிக்கிறோம்.

யூதர் பிதாவாகிய தேவனை விசுவாசித்திருந்தனர். பரிசுத்த ஆவியாகிய
தேவனையும் விசுவாசித்தனர். குமாரனாகிய இயேசுவும் தேவன் என்பதை அறிக்கை
செய்யும்படியாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம்
கொடுத்தனர்.

எனினும் இயேசுவின் நாமத்தில் மட்டும் ஞானஸ்நானம் கொடுப்பது நமது
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கட்டளைக்கு பூரணமாய்க் கீழ்ப்படிவது அல்ல.

அப்போஸ்தலர்-19:1-5
இவ்விடத்தில் எபேசுவிலே சபையின் பிறப்பைக் குறித்து வாசிக்கிறோம்.

அப்பொல்லோ என்பவன் முதலாவது வந்து தனது சாதுரியமான
பிரசங்கத்தினாலே எபேசு பட்டணத்தில்
மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்திருந்தான்.
அந்த விசுவாசிகளைப் பார்த்து பவுல் “நீங்கள் விசுவாசிகளான போது பரிசுத்த
ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டான், அற்கு அவர்கள் “பரிசுத்த ஆவி
உண்டென்று நாங்கள் கேள்விப்படவே இல்லை” என்றனர்.

“அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்று கேட்க, அவர்கள்
யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்” என்றார்கள்.

இவ்வேதப்பகுதியை நீங்கள் கவனித்தீர்களா? பரிசுத்த ஆவி என்ற பெயரை
கேள்விப்படுவதற்கும் அவர்கள்
இருந்தபடியினால் யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்த வந்தான்”
(யோவான்-3:23).

தண்ணீருக்கள் ஒரு விசுவாசி அடக்கம் பண்ணப்படுவதற்கு ஏதுவாய் அதிகம்
தண்ணீர் அவசியம். ஒரு கிண்ணத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு ஒருவர்
ஞானஸ்நானம் எடுக்கவோ, ஒருவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கவோ முடியாது.

B. தண்ணீருக்குள் இறங்க வேண்டும்– அப்-8:38

இவ்விடத்தில் “பிலிப்புவும், மந்திரியும் தண்ணீருக்கள் இறங்கினார்கள்.
பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்” என்று வாசிக்கிறோம்.

ஞானஸ்நானம் எடுப்பவரும், அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் தேவ ஊழியரும்
தண்ணீருக்கள் இறங்க “தேவ ஊழியர் அவரை தண்ணீருக்கள் அடக்கம் செய்ய
வேண்டும். அதற்கு ஏதுவாக இருவரும் தண்ணீரில் இறங்க போதுமான தண்ணீர்
இருக்க வேண்டும்.

C. தண்ணீருக்குள் அடக்கம் பண்ணப்பட வேண்டும்– கொலோ-2:12

“ஞானஸ்நானத்தில் அவரோடே கூட அடக்கம் பண்ணப்பட்டவர்களாயும்”
என்று வாசிக்கிறோம். இதன் பொருள் நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு
கிறிஸ்து மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பரிசுத்த ஆவியின் வல்லமையினால்
மரணத்தை ஜெயித்து எழுந்தது போல,
பாவத்துக்குச்
செத்ததுண்டானால் கிநிஸ்து கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டது போல நாமும்
தண்ணீருக்குள்
ஞானஸ்நானத்தின் மூலம் அடக்கம் பண்ணப்பட வேண்டும். (ரோமர்-8:11)

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 5

ஏழுவிதஞானஸ்நானங்கள்:-

உலகத்தில் ஏழுவித ஞானஸ்நானங்கள் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்பட்டு
வருகின்றன. அவற்றுள் எது வேதத்தின் முறைப்படியுள்ளது என்று கவனிப்போம்.

1.யோவான் கொடுத்த ஞானஸ்நானம்
அப்-19:3, மத்-3:11இவ் வசனங்களில் இந்த யோவான் கொடுத்த ஞானஸ்நானத்தை
குறித்து வாசிக்கிறோம்.

இது மனந்திரும்புதலுக்கென்று கொடுக்கப்பட்டது.

யோவான் ஞானஸ்நானம் கொடுக்க வந்த காரணத்தை அவனே சொல்கிறான் யோவான்-
1:26,27,31,33– கர்த்தராகிய இயேசுவைக் குறித்து அவன் சொன்னது
“இயேசு என்னிலும் பெரியவர் 26,27.

இஸ்ரவேலுக்கு அவர் வெளிப்படும் பொருட்டாக தான் ஜலத்தினால் ஞானஸ்நானம்
கொடுத்த வந்தான் 31.

அவரை எப்படி வெளிப்படுத்துவது? – 33.
தேவன் அவனை அழைத்து அனுப்பும் பொழுது “ஆவியானவர்
புறாவைப்போல் இறங்கி யார் மேல் தாங்குவாரோ அவரே பரிசுத்த ஆவியினால்
அபிஷேகிக்கிறவர்” என்று கூறியுள்ளார்.

எனவே ஒரு சபையை ஸ்தாபிக்க யோவான் ஞானஸ்நானம் கொடுக்க வரவில்லை. முதற்கண்
கிறிஸ்து வெளிப்பட வேண்டுமென்றே அவன் ஞானஸ்நானம் கொடுத்ததான்.

ஒரு சபையை ஸ்தாபிக்க அவன் வனாந்திரத்தில் அல்ல. ஒரு பட்டணத்தில்
ஞானஸ்நானம் கொடுத்திருப்பான்.

இயேசுவே மேசியா – அல்லது கிறிஸ்து (அபிஷேகம் பண்ணுவதற்காக அபிஷேகம்
பண்ணப்பட்டவர்) என்று வெளிப்படுத்தப்பட தேவன் யோவான் ஸ்நானனை
அனுப்பும்போது எப்படி வெளிப்படுத்துவார் என்று கூறியிருந்தார்.

அதாவது ஞானஸ்நானம் பெற்று கரை ஏறும்போது இவர் மேல் புறாவைப்போல்
ஆவியானவர் வந்து தங்குவதே அடையாளம்.
( யோவான்-1:33,
மத்தேயு-3:16) யோவான் இதற்கென்றே
ஞானஸ்நானம்கொடுத்தான்.

2.குழந்தை ஞானஸ்நானம் :-

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஞானஸ்நானம் வேதத்தின்படி கொடுக்கும்
ஞானஸ்நானம் அல்ல.

காரணம் இக்குழந்தைகள் தங்கள் பாவத்தை அறிக்கை செய்த பின், மனந்திரும்பி,
பாவமன்னிப்புக்கென்று, விசுவாசத்தோடே ஞானஸ்நானம்பெறுவது இல்லையே (
மாற்கு-1:5, அப்-2:38, மாற்கு-16:16)

குழந்தைகளுக்கு முழுக்கு ஞானஸ்நானம் கொடுக்க முடியாததால், தெளித்த
ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்.

உன்னதமான கர்த்தரை விலகிப்போனதான
மகா பொல்லாத சுபாவத்தை நீ உன்னைப்
உன் தாயின் கர்ப்பத்தில் தானே உற்பத்தியான நாளிலே
அடைந்தது மெய்யாமே
கர்த்தரின் சாயல் பாவத்தாலே
இல்லாதே போனதாலே
உன் சுபாவம் யாயும் பேயினால்
இப்பாவ விஷத்தாலே
கெடுத்துப் போடப்பட்து.

பிறந்த நாளில் ஸ்வாமிக்கு
அத்தால் நீ பிள்ளையல்ல”
(சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 115)

குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்போர் 1கொரி-10:1-4, அப்-16:30-33,
இவ்வசனங்களைக் கூறி இக்கூட்டங்களில் குழந்தைகளும் இருந்திருக்கக் கூடும்
என்று தாங்களே யூகித்துக் கொள்ளுகின்றனர். இதற்கான விளக்கத்தை இதற்கு
முன் இக் கட்டுரையில் படித்திருப்பீர்கள்.

ஒரு குழந்தைக்கு ஞானஸ்நானம் என்று சொல்லி சில சொட்டுத் தண்ணீரை
தெளிப்பதினாலே, குழந்தைக்கு தன்னில் தானே இதைக் குறித்து “ஞானம் இல்லை”
– சில சொட்டுத் தண்ணீரை தெளிப்பதினாலே “ஸ்நானமும்” இல்லை, இது ஞானஸ்நானமே
இல்லை.

3.தெளிப்பு ஞானஸ்நானம்–

இது கி.பி 753ல் போப் ஸ்டீபன் 11 எனும் ரோம கத்தோலிக்கத் தலைவரால்
நியமிக்கப்பட்டது.
இது சாத்தியமாகாது.

ஏனெனில் எருசலேமில் அவ்வளவு பெரிய நீர் தேக்கங்கள் இல்லை எனக்
கூறுகின்றனா். ஆனால் 3000 பேருக்கும்
அதிகமானவர்களுக்கு ஒரே நாளில் ஞானஸ்நானம் கொடுக்கப் போதுமான தண்ணீர்
அந்நாட்களில் எருசலேமில் உண்டு என்று பலஸ்தீனாவைக் குறித்து எழுதப்பட்ட
புஸ்தகம் ஒன்றில் வாசிக்கலாம் (The Land and Book – The Holy Land, By
Dr. W.M Thompson).

இப்படி தெளிப்பதின் மூலம், ஞானஸ்நானத்தைக் குறித்து வேதத்தில் கூறப்படும்
“அடக்கம் பண்ணுதல்” என்னும் சத்தியத்துக்கு நாம் கீழ்படிவதில்லை (
ரோமர்-6:4, கொலோ-2:12)

4. மரித்தவர்களுக்காக பெற்றுக் கொள்ளும் ஞானஸ்நானம் 1கொரி 15:29

இது சிலருக்கு ஒருவித குழப்பத்தை உண்டுபண்ணக் கூடும். ஆதி அப்போஸ்தலர்
காலத்தில் இருந்த சபை விசுவாசிகள் தங்கள் உடைமைகளை விற்று இவைகளின்
கிரயத்தை அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள்
அப் 4:34-37.

இதற்கு காரணம். கர்த்தராகிய இயேசுக்கிறிஸ்து”இதோ சீக்கிரமாய் வருகிறேன்”
என்று சொல்லிப் போனார்.

மேலும்”இங்கே நிற்பவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் கானும் முன்
மரணத்தை ருசிபார்ப்பதில்லை” மத்-16:28என்றும் கூறிப்போனார்.

இக்காரணங்களின் நிமித்தம் சிலர் தாங்கள்
இரட்சிப்படைந்த பிறகு இயேசுவின் வருகையில் கைவிடப்படாமல் இருக்க வேண்டும்
என்று விரும்பி தங்களது ஞானஸ்நானத்தை தாங்கள் மரிப்பதற்கு சற்று முன்பு
வரையில் ஒத்திப் போட்டிருந்தார்கள்.

ஏனென்றால் ஞானஸ்நானம் பெற்ற பின்பு பின்வாங்கிப் போனால் அவரது வருகையில்
எடுத்துக் கொள்ளப்பட மாட்டார்களே என்று பயந்திருந்தார்கள்.

இப்படி ஞானஸ்நானம் எடுக்காமலேயே விசுவாசத்தில் சிலர் எதிர்பாராமல்
மரித்துப் போனார்கள். அவர்களுக்காக அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒரு
விசுவாசி மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெற்றார்கள் என்று வரலாறு
கூறுகிறது. இப்படிச் செய்வதும் சரியான ஞானஸ்நானம் அல்ல.

அதனால் அனேகர், ஞானஸ்நானம் என்னும் அனுபவம் இயேசுவின் உயிர்த்தெழுதலைக்
காட்டுவதும், இப்படி ஞானஸ்நானம் பெற்றவர்களின் வாழ்க்கை
மறுரூபப்பட்டதுமாய் இருக்க வேண்டும் என்பதை உணராமல் போனார்கள்.

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 4

9. “சிலர் முழுகிதானே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும், யாரிடத்திலும் எங்கும்
எடுத்தால் என்ன?” என்று சொல்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வேத வசனத்தின்படி ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று
இருதயங்களில் உணர்த்தப்பட்டு, போய், எங்கோ ஒரு இடத்தில், ஏதாவது ஒரு
சுவிசேஷகரிடத்தில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்கின்றனர்.

இப்படி இவர்கள் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதற்கு ஒரு காரணம் உண்டு அப்படி
அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறதற்கு அந்த ஊழியர்களுக்கும் ஒரு காரணம்
உண்டு.

அவர்கள் எங்கோ போய் ஒரு சுவிசேஷகன் ஏதோ ஒரு நீச்சல் குளத்தில்
கொடுக்கின்ற ஞானஸ்நானத்தைப் பெற்றுத் தங்களது சொந்த இடத்திற்குத்
திரும்புகின்றனர். யாராவது அவர்களிடத்தில் “நீங்கள் முழுகி ஞானஸ்நானம்
பெற்றீர்களா” என்று கேட்டால் அதற்கு “ஓ நான் பெற்றுவிட்டேன்” என்று பதில்
உரைப்பார்.

இப்படி வேறு இடத்திற்கு சென்று பொறுப்பற்ற ஒரு சுவிசேஷகரிடத்தில் இவர்கள்
ஞானஸ்நானம் பெற காரணம் யாது?

தாங்கள் ஞானஸ்நானம் பெற்றும் திரும்ப வந்து தங்களது பழைய சபையிலேயே
அங்கத்தினர்களாய் தொடர்ந்து ஜீவிக்கிறார்கள் ஏன் தெரியுமா?

அவர்களது ஆவிக்குரிய நலனுக்கென்று சத்தியம் போதிக்கிற சபையில் சேர்ந்து
கர்த்தரில் வளர மனம் இல்லாததினால்தான்.

அப்படிப்பட்டவர்களுக்கு ஞானஸ்நானம்கொடுக்க துடித்துக் கொண்டிருக்கிற
பொறுப்பற்ற சில ஊழியக்காரர்கள் முன் வருவதன் காரணம் தெரியுமா?

அவர்களது
அங்கத்தினத்துவத்துக்கு தங்கள் பழைய சபையிலே சந்தா (Supscription)
கொடுத்துவிட்டு, தங்கள் தசம பாகத்தில் மீதி தொகை முழுவதையும் இந்த
மேற்கூறிய பொறுப்பற்ற ஊழியர்கள் தங்களுக்கென்று பெற்றுக்கொள்வதே! இது
வேதத்தின் முறை அல்ல.

“கண்ட இடமெல்லாம் நீ உன் பலியை செலுத்தாதே”–
தேவன் குறித்த ஸ்தலத்திலே உன் ஆலயம் கட்டப்பட வேண்டும்.
2நாளா-3:1

இவ்வண்ணம் வேதன் ஒரு ஆவிக்குரிய சபையில் உங்களை சேர்த்து அதிலே நீங்கள்
வசனத்தைக் கேட்டு ஆவியிலே வளர சித்தங்கொண்டுள்ளார்.

நல்ல சமாரியன்
(இரட்சகராகிய இயேசு) காயப்பட்டு கிடந்தவனை
(பாவியை) காயம் கட்டி சத்திரத்தில் கொண்டு வந்து (இரட்சித்து, சபையில்
சேர்த்து) ஒரு சத்திரக்காரன் கையில் (ஒரு போதகர் பொறுப்பில்) ஒப்புக்
கொடுத்து, இரண்டு பணத்தையும் அவனுக்கு கொடுத்து (தேவனுடைய வசனமும்,
தேவனுடைய வல்லமையும்– மாற்கு-12:24) போனார்.

தேவ வசனத்தின்படியும், ஆவியானவரின் வழி நடத்துதலின் பேரிலும் கட்டப்பட்ட
சபை அவசியம்.
இதுவே தேவன் குறித்த ஸ்தலம்.

10. சிலர் ஞானஸ்நானத்தை வசனத்தின்படி எடுக்க மனம் உள்ளவர்களாய் இருந்தும்
அதை எவருக்கும் தெரியாமல் ரகசியமாய் எடுத்தால் என்ன? என்று கேட்கின்றனர்.

நீ என் இருதயத்தில் விசுவாசித்து, நீ விசுவாசித்ததை எவரும் அறிய
அறிக்கையிட்டால் இரட்சிக்கப்படுவாய் என்று வேதம் கூறுகிறது.
(ரோமா் 10.9)

உள்ளான மனுஷனிலே ஏற்பட்ட மாறுதலை புறம்பான ஜீவியத்தில் – ரகசியமாய் அல்ல,
பகிரங்கமாய்க் காட்டுவதே ஞானஸ்நானத்தின் பொருள்.

11. “எங்கள் சபையில் குழந்தை ஞானஸ்நானம் கேட்பவர்களுக்கு குழந்தை
ஞானஸ்நானத்தையும், விசுவாசித்து முழுக்கு ஞானஸ்நானம் பெற
விரும்புகிறவர்களுக்கு அவர்கள் விருப்பப்படியும் ஞானஸ்நானம் கொடுத்து
வருகிறோம்; இதில் தவறு என்ன”? என்று சிலர் கேட்கிறார்கள்.

இதற்கு வேதம் சொல்வது என்ன? எபே-4:5ல் ஒரே ஞானஸ்நானம் என்று
கூறப்பட்டிருக்கிறதல்லவா? எனவே ஒருவர் எத்தனை வித ஞானஸ்நானம்
பெற்றிருந்தும், அவர் கடைசியாக பெறும் ஞானஸ்நானங்களையும் ரத்து செய்து
விடுகிறது. ஒன்றுக்கு
மேற்பட்ட ஞானஸ்நானத்துக்கு வேதத்தில் அனுமதி இல்லை.

12 .”மிகவும் குளிரான தேசங்களில் தண்ணீர் உறைந்திருக்குமே! அவர்களுக்கு
எப்படி ஞானஸ்நானம் கொடுக்கிறார்கள்?

அவர்கள் எல்லாரும் ஒரு வருஷத்தில் சில நாட்கள் மாத்திரமே குளிக்கிறார்களா?

குளிக்க என்ன ஏற்படு செய்கிறார்களோ, அப்படியே ஞானஸ்நானத்துக்கும் அவர்கள்
ஆலயங்களில் ஒழுங்கு
செய்யப்பட்டிருக்கிறது. அதிக குளிர் உள்ள தினங்களில் அவர்கள் ஆராதிக்கும்
ஆலயங்கள் (Central Heating System) மூலம்
உஷ்ணமாக்கப்படுகின்றன.

அப்படியே அவர்களை ஸ்நானப்படுத்தும் தண்ணீரையும் சூடாக்கி ஞானஸ்நானம்
கொடுக்கின்றனர்.

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 3

5. “திருச்சபையை விட்டு வெளியே போகக்கூடாது”
இப்படி பேசுகிறவர்களுக்கு நாம் கேட்கும் கேள்வி “மனிதனே, திருச்சபை என்பது எது?”

வனாந்திரத்தில் சபைக்குள்ளிருந்தவனும்” (அப்-7:38)(The Church in the
wildemess) இவ்வசனத்தில் பாஸ்கா ஆட்டின் இரத்தத்தால் மீட்கப்பட்டு
வனாந்திரத்தில் பிராயாணம் பண்ணிக் கொண்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களைக்
குறித்து வாசிக்கிறோம்.

இதுவுவம் திருச்சபையே (Church). மூல பாஷையில் “திருச்சபை” க்கு
(Ekklesia) எனும் பதம்
உபயோகிக்கப்பட்டுள்ளது. அதன் பொருள் யாதெனில், வெளியே
அழைக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

அதுவே திருச்சபையின் ஞான அர்த்தமும் கூட, எனவே இயேசுக்கிறிஸ்துவின்
இரத்தத்தால் மீட்கப்பட்டு இவ்வுலகத்தின் பாவ அடிமைத்தனத்திலிருந்தும்
பிசாசின் ஆதிக்கத்திலிருந்தும் விடுதலை பெற்றவர்களே இச்சபையின்
அங்கத்தினராவர்
(EK = out of, KALEO =Called)

புதிய ஏற்பாட்டில் ஸ்தல சபை (Local Church) என்றும்,
( பிலேமோன்-2,
கொலோ-4:5,
அப்-02:41-47)

அகிலாண்டசபை (Universal Church) எனறும் அர்த்தம் கொள்ளக் கூடிய இரண்டு
வசனங்கள் உண்டு.

ஒருவன் ஜலத்தினால் ஞனஸ்நானம் பெறும்போது இந்த ஸ்தல சபையின் (Local
Church) அங்கத்தினனாகிறான் (அப்-2:40).

ஆனால் 1கொரி-12:13ம் வசனத்தில் வாசிக்கிற ஞனஸ்நானம் ஆவிக்குள்ளாக ஒருவன்
பெறுகிற அபிஷேகமே. இதன் மூலம் அகில உலக சபையிலே (Universal Church)
அங்கத்தினன் ஆகிறான் (1கொரி. 15.9)

எனவே, மேற்கூறிய வசனங்கள் மூலம் நாம் அறிந்து கொள்ளும் சத்தியம் யாதெனில்
திருச்சபை என்பது இரத்தத்தால் மீட்கப்பட்டு இவ்வுலக வழிபாட்டிலிருந்து
அழைக்கப்பட்டவர்களின் கூட்டமே. இதற்கே திருச்சபை என்று பெயர். இவ்வித
ஆவிக்குரிய அனுபவங்களால் ஒருவன் திருச்சபைக்குள்ளே வருகிறானேயன்றி,
திருச்சபையை விட்டு வெளியே போவதில்லை.

இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டு, ஞனஸ்நானம் பெற்றவன்தான் அந்த
மெய்யான திருச்சபையில் அங்கத்தினனாய் இருக்க முடியும்.

6. “தாய்ச் சபையை விட்டு விட்டு எப்படி போவது?” என்று சிலர் கூறுகிறார்கள்.
எது தாய் சபை?

சி.எஸ்.ஜ – தென்னிந்திய திருச்சபை தாய்ச் சபையா?

அல்லது அதற்கு முன்பு இருந்த சபைகளாகிய எஸ்.பி.ஜி, எல்.எம்.எஸ்,
சி.எம்.எஸ், வெஸ்லியன் மிஷன் தாய்ச் சபையா?

இவைகளுக்கெல்லாம் தாயாக மார்ட்டின் லுத்தர் ஸ்தாபித்த லுத்தரன் சபை தாய்ச் சபையா?

அல்லது அந்த லுத்தரன் சபை ரோமன் கத்தோலிக்கச் சபையிலிருந்து வந்ததனால்
இந்த ரோமன் கத்தோலிக்கச் சபை தாய்ச் சபையா?

எது தாய்ச் சபை?

ரோமன் கத்தோலிக்கச் சபை நாம் வேதத்தில் காணும் அப்போஸ்தல
திருச்சபையிலிருந்து திரிந்து போனதே.

எனவே நீர் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேதத்தில் நாம் வாசிக்கும் அப்போஸ்தல திருச்சபையே யாவற்றிற்கும் தாய்ச்சபை.

7. அப்-16:31-34,
1கொரி-10:1-4
இவ்வசனங்களை வாசித்து விட்டு சிலர்
“வீட்டாரனைவரோடும் கூட ஞனஸ்நானம் பெற்றான்” , “எல்லாரும் … ஞானஸ்நானம்
பண்ணப்பட்டார்கள்”– என்னும் சொற்கள் எழுதியிருப்பதினால்
சிறைச்சாலைக்காரன் வீட்டில் குழந்தைகளும் இருந்திருக்கக் கூடும்.
இஸ்ரவேலர் மத்தியில் குழந்தைகளும் சிவந்த சமுத்திரத்தைக் கடந்து
போயிருக்கக் கூடும். எனவே அவ்விரு இடங்களிலும் குழந்தைகளும் ஞனஸ்நானம்
பெற்றிருக்கக் கூடும் என்று வாதாடுகிறார்கள்.

உங்கள் குடும்பத்தை யாராகிலும் விருந்துக்கு அழைத்தால் நீங்கள்
குடும்பமாக சென்று விருந்துணடடீர்கள் என்றால், உங்கள் வீட்டிலுள்ள பால்
குடிக்கும் குழந்தையையும் கூட விருந்து புசித்தது என்று நீர் சொல்வீரோ?

அப்படி சொல்வது தவறு அல்லவா?

ஆகவே ஞானஸ்நானம் பாவங்களை அறிக்கை செய்து அவற்றை விட்டு, விட்டு
விசுவாசித்தவர்களுக்கு மட்டுமே!

8. “ஒரே ஞானஸ்நானம்
(எபேசியா் 4.5)

“ஞானஸ்நானம் ஒன்றுதானே, பின்னை ஏன் ஏற்கெனவே குழந்தையில் ஞானஸ்நானம்
பெற்ற நாம் திரும்பவும் ஞானஸ்நானம் பெற வேண்டும்” என்று வேறு சிலர்
தர்க்கிக்கின்றார்கள்.

முதலில் எடுத்த ஞானஸ்நானம் வேத வசனத்தின் முறைப்படி இல்லாவிடில் அவர்களை
திரும்பவும் திருவசனத்தின் பிரமாணத்தின்படி ஞானஸ்நானப்படுத்துவது
வேதத்தின் முறைதான்.

“ஒரே ஞானஸ்நானம்” என்று எழுதப்பட்டது எபேசு சபைக்கே. அந்த எபேசு சபையே
முதலில் எடுத்த ஞானஸ்நானம் தவறு என்று உணர்ந்து சரியான வேத முறைப்படி
ஞானஸ்நானம் பெற்றது நினைவிருக்கட்டும்
( அப்-19:3-5).

தவறான ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு திரும்ப ஞானஸ்நானம் கொடுத்ததை
வேதத்தில் வாசிக்கிறோம்.

இப்படி தவறான ஞானஸ்நானம் பெற்றவர்களுக்கு வேதத்தின் முறையான ஞானஸ்நானம்
திரும்ப கொடுத்தவர்கள் திருச்சபை சரித்திரத்தில் உண்டு அவர்களை
Ana-Baptists என்று வரலாறு கூறுகிறது.

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 2

ஞனஸ்நானத்தில் திருவசனத்திற்குக் கீழ்ப்படிய மனதில்லாமல் இருக்கும் சிலர்
கேட்கும் முரணான கேள்விகள்

1. இப்பொழுது “இந்த முக்கியமான அனுபவத்திற்கு நான் எப்படி கீழ்ப்படிய
வேண்டியது? முழுகித்தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமோ?”

முதலாவது “முழுக்கு ஞனஸ்நானம்” என்ற சொல் வேதத்தில் இல்லை, ஆனால்
“ஞனஸ்நானம்” என்கிற பதத்திற்கே “தண்ணீரில் முழுகுதல்” என்றுதானே பொருள்.

மூல பாஷையாகிய கிரேக்க மொழியிலே இப்பொழுது இருக்கும் பதங்களும் அவைகளின்
அர்த்தங்களும் நமது ஆண்டவர் இருந்த காலத்திலும் பழக்கத்தில் இருந்தவைகளே.

அதாவது பாப்டிசோ (Baptizo) என்றால் முழுக்கு என்றே பொருள். வேதத்தில்
இப்பதமே இவ்வனுபவத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்து.

நமது தமிழ் மொழியில் “ஸ்நானம்” என்ற பதத்துக்கு சில துளிகள் தலையின் மீது
தொளிப்பது என்று பொருளல்ல, அப்படி அனுதினமும் தெளித்து விட்டு ஸ்நானம்
பண்ணிவிட்டேன் என்று யாராவது சொல்லுவார்களா?

வேதத்தின் கட்டளை யாதெனில் தன் பாவங்களை அறிக்கை செய்து விட்டு விட்டவன்
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை அறிக்கை செய்து, ஞனஸ்நானத்தினால்
தண்ணீரில் மூழ்கி அடக்கம் பண்ணப்பட வேண்டும் என்பதே.

அவரோடு கூட அடக்கம் பண்ணப்படுதலின் அடையாளம் இதுவே.

திருச்சபையின் ஆதித் தலைவர்களின் விளக்கம்

அ.”ஞானஸ்நானம்” என்ற சொல் முழுகுதல் என்று பொருள்படுகிறது ஆதித்திருச்சபை
பின்பற்றிவந்தது “முழுகுதலே” – ஜான் கல்வின்

ஆ. “ஞனஸ்நானத்தில் கிறிஸ்துவோடு கூட அடக்கம்பண்ணப்பட்டோம்” (ரோமா்-6:4).

இது பண்டைய முறையான முழுக்குதலினால் ஞானஸ்நானம் கொடுக்கிறதை குறிப்பிடுகிறது.
– ஜான் வெஸ்லி

இ.”ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் முற்றிலுமாக நீரில் அமிழ்த்தப்பட வேண்டும்
என்று நான் விரும்புகிறேன்”.
– மார்ட்டின் லுத்தா்

“திரியேகரான உம்மையே
நான்பிள்ளை பக்தியாக
பணிந்து உமக்கேற்கவே
நடப்பேன் என்றதாக
இஸ்நானத்திலே அடியேன்
உடன்படிக்கை பண்ணினேன்
இதை நினைப்பேனாக.”
– சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 113

“தெய்வீக நீதியாவுக்கும்
சரி செலுத்த வந்த
இரட்சகர் ஸ்நானமும்
யோர்தானில் பெற்ற னந்ந
உயிர் உண்டாக்குஞ்சாவுக்கே
அமிழ்ந்தார் , நமக்காக
முழுக்கின் நற்பலனிலே
நமக்கு பங்குண்டாக
இஸ்நானத்தை அமைத்தார்.”
“தண்ணீரை
மாத்திரங்கண்ணால்
கண்டாலும், விசுவாசம்
அத்தோட கிறிஸ்தின் ரத்தத்தால்
உண்டான பாவடி நாசம்
உண்டென்றும் அறிகிறது.

ஆம், ஞானஸ்நானத்திலே
இரட்சிப்பு யாவும் நமக்கு
பலிக்க, ஆவியாலே
நாம் புதுசிருஷ்டியாவோம்.”
– சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 114

“அதுதான் மறு ஜென்ன
முழுக்கு அத்தால் சாவும்
தெய்வீக கோபம் நரக
கொடியுங்கோடும் யாவும்
இல்லாதேபேவதன்றியே
கர்த்தரின் ஆசிர்வாதமே
நமக்கத்தால் உண்டாகும்.”
-சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 115

2 .குழந்தையிலேயே ஞனஸ்நானம் பெற்ற நான் திரும்பன ஞானஸ்நானம் பெற அவசியமா?

இக்கேள்வியை கேட்கும் நீர் குழந்தையாயிருக்கும் போது ஞனஸ்நானம்
எடுக்கவில்லையே. ஞனஸ்நானம் உமக்கு கொடுக்கப்பட்டது.

குழந்தைப்பருவத்தில் நீர் ஒன்றையுமே உமக்கென்று பெறுப்புணர்ச்சியோடு
செய்துகொள்ளவில்லையே, சகலமும் உமக்கு செய்யப்பட்டது.

குளித்தல்,
புசித்தல்,
குடித்தல் மற்றும்
குழந்தை செய்யும் அசுசிகள் எல்லாவற்றிற்கும் நீர் பொறுப்பாக
இருந்ததில்லையே.

அதுபோலவே நீர் குழந்தையாக இருந்த போது ஞனஸ்நானம் எடுக்கவில்லை உமக்கு
ஞனஸ்நானம் கொடுக்கப்பட்டது.

கர்த்தாவின் சாயல் பாவத்தாலே
இல்லாதே போனதாலே
உன் ஸ்வாபம் யாவும் பேயினால்
இப்பாவ விஷத்தாலே
கெடுத்துப்போடப்பட்டது;
பிறந்த நாளில் ஸ்வாமிக்கு
அத்தால் நீ பிள்ளை அல்ல”
சுவிசேஷ லுத்தரன் ஞானப்பாட்டு 115

பருவம் அடைந்த பிறகு இக்குழந்தை ஞனஸ்நானத்தின் தவறை சீர்செய்வதற்கு
ஒப்பாக “திடப்படுத்தல்” (Confirmation) என்ற வேதத்தில் இல்லாத ஒன்றை
அனுசரிப்பதினால், தான் முந்தி செய்த தவறினை மற்றொரு தவறினால்
சரிப்படுத்திக்கொள்ள பார்ப்பவா் உண்டு, அச்சமயத்தில் பாடுகிற பாட்டு
நினைவிலிருக்கிறதா?

“அன்னை தந்தையுந்தன் சன்னதி
முன்னின்று சொன்ன வாக்குத்தத்தம்… அல்லாது (செல்லாது, பிரயோஜனமல்லாது)
இப்போது (புத்தி தெரிந்த பிறகு, பருவம் அடைந்த பிறகு, செய்வது இன்னதென்று
பொறுப்பை உணர்ந்த பபிறகு)
என்னை ஜீவ பலியாய் ஒப்புக்கொடுத்தேன் ஏற்றுக்கொள்ளும் இயேசுவே”.
மேலும்: “பாவங்களை அறிக்கையிட்டு,” மனந்திரும்பி,” “விசுவாசமுள்ளவனாகி”
ஞனஸ்நானம் பெற வேண்டும் என வேதம் கூறுகிறது.

நீர் ஒரு சிசுவாயிருக்கையில் உம்முடைய பாவங்களை அறிக்கையிட்டதுண்டோ? மனந்திரும்பி
விசுவாசித்ததுண்டோ?

3. “சிலுவையில் அறையப்பட்டிருந்த கள்ளன் ஞனஸ்நானம்
பெறவில்லையே, அவன் எப்படி பரதீசடைந்தான்?”

அந்தக் கள்ளனைப் போல் நீா் இல்லையே,
மரணத்தருவாயிலிருந்து அவனுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் அவனும்
ஞனஸ்நானம் எடுத்திருப்பான்.
நீரும் அவ்வண்ணமே சிலுவையில் அறையப்பட்டு மரிக்கும் தருவாயில்
இரட்சிப்படைந்திருந்தீரேயானால் அந்தக் கேள்வியை கேட்பதில் அர்த்தமுண்டு.

4. ஞனஸ்நானம் பெறாமலே அநேகர் மரிக்கிறார்களே, அவர்கள் எல்லோரும்
நரகத்திற்கா செல்கிறார்கள்?

இந்தக் கேள்வியை கேட்பவரிடம் மற்றொரு கேள்வியை கேட்கலாமே.

கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவை இரட்சகராக விசுவாசித்து
ஏற்றுக்கொள்ளாதவர் நிலை என்ன?

அவர்கள் இரட்சிப்பைக் குறித்து கேள்விப்படாமல் மரித்திருந்தால்
அவர்களுக்கு வேறு ஒரு பிரமாணம் உண்டு என வேதம் கூறுகிறது.

ரோமர்- 2:11-16,
ரோமர்-1:19-20
இவ்விடத்தில்
“மனசாட்சியின் பிரமாணம்” என்று தேவன் ஒரு பிரமாணத்தை மனிதனுடைய இருதயத்தில்
எழுதிவைத்துள்ளார்.

அவரே மனிதனுடைய அந்தரங்கங்களைக் குறித்து நியாயம் தீர்ப்பார்.

“அறியமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர் போல் இருந்தார்.” (அப்-17:30)

ஆதலால், ஒருவன்
நன்மைசெய்ய
அறிந்தவனாயிருந்தும்,
அதைச்செய்யாமற் போனால்,
அது
அவனுக்குப்பாவமாயிருக்கும்.என்று வேதம் கூறுகிறது (யாக்-4:17)

அறிந்தும் கீழ்ப்படியாதவர்கள் அநேக அடிகளால் அடிக்கப்படுவார்கள்என்று
கூறப்பட்டதை நீா் வாசித்ததில்லையா? (லூக்கா-12:47)

ஞனஸ்நானம் பற்றிய முழுமையான விளக்கவுரை பாகம் – 1

ஞனஸ்நானத்தின் முக்கியத்துவம்

1. ஞானஸ்நானம் என்றால் என்ன?

2. அந்த ஞானஸ்நானம் யார் எடுக்க வேண்டும்?

3. அதை எப்படி எடுக்க வேண்டும்?

4. அப்படி வேத வசனத்திற்கு கீழ்ப்படிந்து எடுப்பதினால் பலன் என்ன?

மேற்கூறிய இக்கேள்விகளுக்கு சத்திய வேதம் தெளிவாய் எவ்வளவேனும்
சந்தேகத்திற்கு இடமின்றி எவரும் அறிந்து உணர்ந்து கீழ்ப்படிவதற்கு ஏதுவாக
நமக்குப் போதிக்கிறது,
நமது கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் சுவிஷேசம்
பிரசங்கிக்கப்பட்டு வருகிற இடமெங்கும் ஞனஸ்நானம் என்கிற திருமுழுக்கு
அனுசரிக்கப்பட்டு வருகிறது. இது நமது கர்த்தர் கொடுத்த கட்டளைகளில்
முக்கியமானதொன்று.

உலகமெங்கும் போய் சர்வ ஜாதிகளையும் சீஷராக்கி, ஞனஸ்நானம் கொடுக்க
கர்த்தர் கட்டளை கொடுத்தார்.

எனவே சீஷத்துவத்தின் முக்கியமான படிகளில் இதுவும் ஒன்று.

கிறிஸ்தவ ஆவிக்குரிய ஜீவியத்தில் இத்தகைய முக்கியத்துவம் கொண்ட
இவ்வனுபவத்தை பலர் உதாசீனம்பண்ணி, ஞனஸ்நானத்தை யார் எடுத்தாலும், எப்படி
எடுத்தாலும் தவறில்லை என கருதுகின்றனர்.

இந்த ஞனஸ்நானம் என்கிற சத்தியம் நமது இரட்சிப்பை சார்ந்திருக்கிறது.
என்பதை வேதத்தின் மூலம் நாம் அறிகிறோம்.

I பேதுரு 3:21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது,
மாம்ச அழுக்கை
நீக்குதலாயிராமல்,
தேவனைப்பற்றும்
நல்மனச்சாட்சியின்
உடன்படிக்கையாயிருந்து,
இப்பொழுது
நம்மையும்
இயேசுகிறிஸ்துவினுடைய
உயிர்த்தெழுதலினால்
இரட்சிக்கிறது;

மாற்கு 16:16
விசுவாசமுள்ளவனாகி
ஞானஸ்நானம்பெற்றவன்
இரட்சிக்கப்படுவான்;
விசுவாசியாதவனோ
ஆக்கினைக்குள்ளாகத்
தீர்க்கப்படுவான்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால் இரட்சிப்பு உண்டென்று
விசுவாசிக்கிறோமே. அவரது உயிர்தெழுதலினாலும் இரட்சிப்பு உண்டென்று
இதனால் நாம் அறிய வேண்டும்.

எனவே நமது இரட்சிப்பு பூரணப்பட ஞனஸ்நானமும் அவசியம் என்பதை நாம் அறிவோம்.

ரோமர் 6:4
மேலும் பிதாவின்
மகிமையினாலே
கிறிஸ்து மரித்தோரிலிருந்து
எழுப்பப்பட்டதுபோல,
நாமும்புதிதான
ஜீவனுள்ளவர்களாய்நடந்துகொள்ளும்படிக்கு,
அவருடைய
மரணத்திற்குள்ளாக்கும்
ஞானஸ்நானத்தினாலே
கிறிஸ்துவுடனேகூட
அடக்கம்பண்ணப்பட்டோம்.

கொலோசெயர்2:12
ஞானஸ்நானத்திலே
அவரோடேகூட
அடக்கம்
பண்ணப்பட்டவர்களாகவும்,
அதிலே அவரை
மரித்தோரிலிருந்தெழுப்பினதேவனுடைய
செயலின்மேலுள்ள
விசுவாசத்தினாலே
அவரோடேகூட
எழுந்தவர்களாகவும்
இருக்கிறீர்கள்.

உலகத்திலுள்ள எல்ல மதக்
கர்த்தாக்களும் மரித்து கல்லறைகளில் அடக்கம்
பண்ணப்பட்டவர்களாயிருக்கையில், நமது ஆண்டவருடைய கல்லறை மாத்திரம்
காலியாயிருக்கிறது; இந்த அற்புதத்தைக் குறித்த சாட்சியை நாம் உலகிலுள்ள
மற்ற மக்களுக்கு எப்பபடி எடுத்துக்காட்ட முடியும்?
இதையே மேற்கூறிய வசனங்கள் தெளிவாய் விளக்குகின்றன.

நாம் தண்ணீரில் அடக்கம் பண்ணப்படும் செயல் கிறிஸ்துவின் கல்லறை
அடக்கத்தோடு உருவ ஒப்புமை செய்யப்படுகிறதை நாம் கவனிக்கிறோம்.

அந்தபடியே தண்ணீரிலிருந்து வெளியே வருவதை கிறிஸ்து மரணத்திலிருந்து
உயிரோடு எழுந்ததுடன் உருவ ஒப்புமை செய்யப்படுகிறதையும் காணலாம்.

இந்த மகிமையான அனுபவத்தை பலர் அவமதித்து, அசட்டை செய்து, கீழ்ப்படியாமல்
தேவ ஆலோசனைக்கு எதிர்த்து நிற்கிறார்கள்.

எப்படியெனில் “இந்த ஞனஸ்நானம் அவ்வளவு முக்கியமல்ல; இரட்சிப்புதான்
முக்கியம். கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்படுதலே
அவசியமானது. ஆவியைப் பெறுவதும் அவசியமே.

ஆனால் எந்த
ஞனஸ்நானத்தை, யார், எப்படி எடுத்தாலும் குற்றமில்லை” என்று
பிரசங்கிப்போரும் உண்டு.

ஆனால் வேதம் என்ன கூறுகிறது?

I யோவான் 5:8
பூலோகத்திலே]
சாட்சியிடுகிறவைகள்மூன்று,ஆவி, ஜலம், இரத்தம்
என்பவைகளே, இம்மூன்றும்
ஒருமைப்பட்டிருக்கிறது.

ஆங்கிலத்தில் “இவை ஒன்றை ஒன்று ஆமோதிக்கிறது” (These three agree in one)
என வாசிக்கிறோம்.

ஆவியானவரின் சாட்சி, ஜலம் கொடுக்கும் சாட்சியை ஆமோதிக்க வேண்டும். ஜலம்
இரத்தம் கொடுக்கும் சாட்சியை ஆமோதிக்க வேண்டும்.

எபிரெயர் 12:24
புது உடன்படிக்கையின்
மத்தியஸ்தராகிய
இயேசுவினிடத்திற்கும்,
ஆபேலினுடைய
இரத்தம்பேசினதைப்
பார்க்கிலும்
நன்மையானவைகளைப்
பேசுகிற
இரத்தமாகிய
தெளிக்கப்படும்
இரத்தத்தினிடத்திற்கும்வந்துசேர்ந்தீர்கள்.

ஆபேலின் இரத்தம் பேசினதாமே! என்ன பேசிற்று?

அது பூமியிலிருந்து பரலோகத்தின் தேவனைக் கூப்பிட்டு, பழி வாங்கினது (ஆதி 4:10)

ஆனால் கர்த்தராகிய இயேசுவின் இரத்தமோ கொலை பாதகரை பழிவாங்காமல்
அவர்களுக்காக பிதாவாகிய தேவனிடத்தில் பாவ மன்னிப்பைக் கோரினது.
( லூக்கா 23:34, 1யேவான் 1:7).

இப்படி ஒருவன் கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தின் சாட்சியைப் பெற்றது
உண்டானால், அந்த சாட்சியை ஜலமும் ஆமோதித்தல் அவசியமே.

அவன் ஞனஸ்நானம் பெற்ற தண்ணீர் அவனைக் குறித்து சாட்சி சொல்லுமே.

எப்படியெனில் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட இயற்கையின் பொருள்கள் அனைத்தும்
அவருக்கு சாட்சி கொடுக்கும் அல்லவா?
( மாற்கு 6:11, லூக்கா 9:5,
சங் 19:1-4)

இப்படி ஜலம் கொடுக்கும் சாட்சியை ஆவியானவர் ஆமோதிக்க வேண்டும்.

அதையே ரோமர் 8:16 இல் வாசிக்கிறோம்.

“நாம் வேனுடைய பிள்ளைகளாக இருக்கிறோம் என்று ஆவியானவர்தாமே நம்முடைய
ஆவியுடனே கூட சாட்சி கொடுக்கிறார்.”

“நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால்அதைப் பார்க்கிலும் தேவனுடைய
சாட்சி அதிகமாயிருக்கிறது.

தேவன் தமது குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சி இதுவே” (1யேவான் 5:9)
பிதாவாகிய தேவன் குமாரனாகிய இயேசுவைக் குறித்து என்ன சாட்சி கொடுத்தார்?

“இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்”
(மத் 3:17)

இது அல்லவோ பிதாவானவா் குமாரனைக் குறித்து கொடுத்த சாட்சி.

இவர் ஞனஸ்நானம் பெற்று கரை ஏறின உடனே பிதா கொடுத்த சட்சி இதுவே. இதை
வாசிக்கும் அருமை நண்பரே, இவ்விதமான சாட்சியை நீர் பெற்றதுண்டோ?

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*